பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

கடந்த 100 தினங்களாக இடம்பெற்றுவந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணி பகிஷ்கரிப்பை நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவுசெய்யவுள்ளதாக இலங்கை பல்கலைகழக விரிவுரையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் விரிவுரையாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !