மட்டக்களப்பில் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருதால் வாகன விபத்துச் சம்பவங்களும் இடம் பெற்றுவருகின்றன. மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் பாரிய சேதத்திற்குள்ளாகியதாக மட்டக்களப்பு தலைமையகமோட்டார் போக்குவரத்து பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியும் கொழம்பிலிருந்து காத்தான்குடி நோக்கிவந்த வேனும் நேருக்கு நேர் மோதிய போது வேனுக்குமேல் பஸ் ஏறியுள்ளது.மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !