
கொட்டன்வூட்டைச் சேர்ந்த ரொபேர்ட் கக்ளியானோ மற்றும் சன் பிறன்ஸிகோவைச் சேர்ந்த அரிஸ், கியான் ஜெக் ஆகிய வானியல் ஆராய்ச்சியாளர்களே மேற்படி நான்று சூரியனைக் கொண்ட கோளினைக் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியைவிட ஆறுமடங்கு பெரிதான இக்கோளானது வாயுவினால் சூழப்பட்டதென நம்பப்படுகிறது. கக்ளியானோவும் ஜெக்கும் அமெரிக்காவின் யாலே பல்கலைக்கழகத்தின் பகுதிநேர கோள் கண்டுபிடிப்பாளர்களாக செயற்படுகின்றனர். நாசாவின் கப்லர் தொலைநோக்கியினூடாக வானியல் தரவுகளைப் பெற்று மக்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தினூடாகவே இப்புதிய கோளினைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியின் பெறுமதி 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் (கிட்டத்தட்ட 7ஆயிரத்து 700 கோடி ரூபாய்).
யாலே பல்கலைக்கழக வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோளானது ஹவாயில் இருக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வு அறிக்கையை யாலே பல்கலைக்கழகத்தின் மெக் ஸ்குவம்ப், நவடாவில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க வானியலாளர் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இக்கோளினது மாதிரி உருவத்தினை நாசா இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !