Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Written By Anonymous on Sunday, September 30, 2012 | 2:53:00 PM

 (M-THANANCHAYAN-M)
மட்டக்களப்பு படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நவகி நகர் -  புதுமுன்மாரிச்சோலை எனும் கிராமத்தில் இன்று மாலை வீசிய மனி சூறாவெளி காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் த.குழந்தைவடிவேல் தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 102 நபர்கள் தங்களது உறவினர்களின் வீடுகளை நாடிச் செல்வதாகவும் அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தல் இப்பகுதியில் ஏற்பட்ட யுத்தத்தினால் இடம் பெயர்ந்து கடைசியாக கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் மீளக்குடியமர்தப்பட்ட இம்மக்கள் தற்போது வேளாண்மை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினையும் மேற்கொண்டு வரும் இவ்வேளையில்
மிக அண்மைக்காலமாக இப்பகுதியில் வரட்சி நிலவி வந்தபோதும் தற்போது திடீரென இப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் சுழல் காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்தும் வீடுகளின் கூரைகள் மற்றும் வீட்டுச் சுவர்கள் இடிந்தும் வீடுகளின் மேல் மரங்கள் முறிந்துவிழுந்துள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.






Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya