Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » ஆசிரியர், மாணவர்கள் பாடசாலைகளில் கைத்தொலைபேசி பாவனைக்குத் தடை

ஆசிரியர், மாணவர்கள் பாடசாலைகளில் கைத்தொலைபேசி பாவனைக்குத் தடை

Written By sakara on Sunday, June 10, 2012 | 9:43:00 PM


  வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவை வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா விடுத்துள்ளார்.

வவுனியா தெற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளில் பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக பலராலும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதால் வேண்டத்தகாத சில செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் மற்றைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது பாட நேரங்களில் மாணவர்கள் இன்ரநெற் பார்க்கக்கூடிய வசதிகள் காணப்படுவதால் அவற்றைப் பயன்படுத்தி குழுவாக வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போது கைத்தொலைபேசியில் உரையாடுவதிலேயே தமது கூடுதலான நேரத்தினை செலவிடுவதாகவும் இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்களினாலும் சமூக ஆர்வலர்களாலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya