
இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை குறைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 வருடங்களில் இலங்கையின் சனத்தொகை 0.7 வீதத்தில் குறைவடைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய 1.33 வீத சனத்தொகை அதிகரிப்பும் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்த 0.5 வீத சனத்தொகை அதிகரிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளதென குடிசன மற்றும் தொகைமதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !