
மட்டக்களப்பு மாவட்டத்தில் 950 பேருக்கே நியமனங்களுக்கான தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் மேலதிகமாக உள்ளவர்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற அமைச்சர் அங்கு இடம்பெற்ற நேர்முகத்தேர்வு குறித்தும் நியமனங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை தொடர்புகொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரினார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு பட்டதாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் யாரும் பணங்களை வழங்கி ஏமாறவேண்டாம் என தெரிவித்த பிரதியமைச்சர், அவ்வாறானவர்கள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவருமாறும் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !