Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » மட்டு. பட்டதாரிகள் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க ஜோன் செனவிரட்ன உறுதி

மட்டு. பட்டதாரிகள் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க ஜோன் செனவிரட்ன உறுதி

Written By sakara on Friday, June 15, 2012 | 9:51:00 PM

மட்டு. பட்டதாரிகள் 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க ஜோன் செனவிரட்ன உறுதிமட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பட்டதாரிகளின் நேர்முகப்பரீட்சையின் படி தகுதியானவர்கள் என தெரிவுசெய்யப்பட்ட 1350 பேருக்கு நியமனங்கள் வழங்க மீள்குடியேற்ற பிரதியமைச்சரிடம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 950 பேருக்கே நியமனங்களுக்கான தேவைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் மேலதிகமாக உள்ளவர்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற அமைச்சர் அங்கு இடம்பெற்ற நேர்முகத்தேர்வு குறித்தும் நியமனங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். 

இதன்போது தொலைபேசியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை தொடர்புகொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரினார். 

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு பட்டதாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

இந்த நியமனங்கள் யாரும் பணங்களை வழங்கி ஏமாறவேண்டாம் என தெரிவித்த பிரதியமைச்சர், அவ்வாறானவர்கள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவருமாறும் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya