Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » மட்டு.நகர ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக்கவரும் தளமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

மட்டு.நகர ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக்கவரும் தளமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Written By sakara on Tuesday, September 25, 2012 | 11:27:00 AM


மட்டக்களப்பு மாவட்டச்செயலகம் செயல்படும் ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தளமாக அபிவிருத்தி செய்ய கலாசார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விஷேட திட்டத்துக்கென தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தில் சுமார் 13 கோடியே 90 இலட்சம் ரூபாவை தற்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் அங்கீகாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் அமுலாக்கத்தின் நடவடிக்கைகளை ஆராய தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் அமைச்சரான தொலைத் தொடர்பு ,தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று இப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya