
மேற்படி நபர்கள் விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது புத்தர் சிலைக்கு முன்னால் நின்று பல்வேறு கோணங்களில் படங்கள் பிடித்துள்ளனர். பின்னர் ஸ்ரூடியோ ஒன்றுக்குப் புகைப்படங்களைக் கழுவச் சென்றிருந்தபோது குறித்த நபர்கள் புத்தர் சிலைக்கு முன்பாக நின்று அநாகரிகமாக புகைப்படங்கள் எடுத்திருந்தமை ஸ்ரூடியோ முகாமையாளருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஸ்ரூடியோ முகாமையாளர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் மூன்று வெளிநாட்டவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !