
இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFC), மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற அரச சார்பான உத்தியோகபூர்வ இணையத்தளங்களும் இனந்தெரியாத சில புலம்பெயர் விசமிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி அரச சார்பான இணையத்தளங்களை ஒருவர், குறித்த ஒரு குழுவினர் தான் கைப்பற்றியுள்ளதாக தம்மால் கருத முடிகின்றது என அரச கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில அரச இணையத்தளங்களை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அரச சார்பான தளங்களைக் கைப்பற்றியுள்ள மர்ம சக்திகளின் நோக்கம் என்ன, இவர்களின் பின்னால் யார் இயங்குகின்றார்கள் என்பன தெரியாத இலங்கை அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இலங்கை அரசைப் பற்றிய உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை அடக்கி வரும் இந்நிலையில் அரச சார்பு தளங்கள் மீதான இப்பாரிய தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
அத்தோடு புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து அரசுக்கு எதிரான இந்த தாக்குதலில் இன்னும் பல இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கீழே இணைத்துள்ள இணையத்தளங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !