Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 109 பேர் கல்குடாவில் கைது

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 109 பேர் கல்குடாவில் கைது

Written By sakara on Sunday, July 15, 2012 | 5:41:00 PM

கள்ளப்படகு மூலம் மட்டக்களப்பு - கல்குடா கடல் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த 109 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

இதில் 101 தமிழர்களும் 8 சிங்களவர்களும் அடங்குவர். 

"செவ்வந்தி துவ" எனப்படும் மீன்பிடி படகில் இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், வாழைச்சேனை, கல்முனை, தலவாக்கலை, கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் அனைவரும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya