Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » சவூதி நாட்டுப் பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கு பெறலாம்: மன்னரின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்

சவூதி நாட்டுப் பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கு பெறலாம்: மன்னரின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்

Written By sakara on Monday, June 25, 2012 | 8:53:00 PM


  சவூதி நாட்டு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதில் இதுவரை காலமும் நிலவி வந்த தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது.

லண்டனில் உள்ள சவூதி தூதரகத்தினால் இதுதொடர்பான அறிக்கையொன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சவூதியின் இத்தீர்மானமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெறும் எந்த வீராங்கனையும் அதில் பங்கேற்க எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை சவூதி ஒலிம்பிக் குழு கண்காணிக்கும் எனத் தெரியவருகின்றது.

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறியே அந்நாட்டு மன்னர் அப்துல்லா இம்முடிவினை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதுவரை காலமும் சவூதி நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் எவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை.

பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு அங்கு பல்வேறு தடைகள் மட்டும் எதிர்ப்புகள் நிலவிவந்தன.

எனினும் சர்வதேச அழுத்தத்தின் விளைவாகவே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
_
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya