Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » பாப்பரசரை சந்தித்த ஜனாதிபதி

பாப்பரசரை சந்தித்த ஜனாதிபதி

Written By sakara on Friday, June 8, 2012 | 8:09:00 PM



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை, வத்திக்கானிலுள்ள 16ஆவது பெனடிக் பாப்பரசரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர். 
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி – பாப்பரசர் இடையே பேச்சு
30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டியமை மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்திகள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து பாப்பரசர் 16ஆவது பெனடிக் அவர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரதும் சட்டரீதியான எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் அதற்கு ஒன்றிணைந்த முயற்சி தேவைப்படும் என்பதும் பாப்பரசரின் எதிர்ப்பார்ப்பாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்தவதற்காக சமயம், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் பங்களிப்பு செய்வதாகவும் பாப்பரசர் இதன்போது உறுதியளித்துள்ளார். 



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya