Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » களனி கங்கையில் தங்கம்! பிரித்தெடுப்பதால் சூழலுக்கு பங்கம்!

களனி கங்கையில் தங்கம்! பிரித்தெடுப்பதால் சூழலுக்கு பங்கம்!

Written By sakara on Thursday, May 24, 2012 | 11:14:00 AM

களனி கங்கையில் தங்கம்! பிரித்தெடுப்பதால் சூழலுக்கு பங்கம்!களனி கங்கை பூகொட பகுதியில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து தங்கத்தை பிரித்து எடுக்க பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயன திரவத்தால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

இந்த இரசாயன திரவம் பயன்படுத்துவது சட்டவிரோதமானதென நிலையத்தின் தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த தெரிவித்தார். 

தங்கம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பலர் களனி கங்கையில் தங்கம் பிரித்தெடுக்க வருகை தருவதாகவும் ஆனால் அதிக வைப்பு இருப்பதாக கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர்களை இன்று (24) சந்தித்து கலந்துரையாடி சட்டதிட்டத்திற்கு அமைய தங்கத்தை பிரித்தெடுக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என பூகோல மற்றும் அகழ்வாராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி என்.பி.விஜயானந்த கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya