Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » கிழக்கு முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

கிழக்கு முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

Written By sakara on Friday, May 25, 2012 | 10:45:00 AM



(றிப்தி அலி)


கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கே வழங்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  கூறினார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த கிழக்கு மாகண சபை தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எமது கட்சி போட்டியிட்டமையினால் இம்முறை முதமைச்சர் பதவியினை எமது கட்சிக்கே வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும் முதலமைச்சர் பதவியினை கோருவதற்கான எந்தவித தகுதியுமில்லை என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதா என வினவியதற்கு, 'தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகளாகவே அனைத்து முஸ்லிம் கட்சிகளும் உள்ளன' என  பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதனால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முஸ்லிம் முதலமைச்சரை கைப்பற்ற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya