Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: அடுத்த வாரம் நேர்முகப் பரீட்சை

கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: அடுத்த வாரம் நேர்முகப் பரீட்சை

Written By sakara on Wednesday, May 30, 2012 | 10:41:00 PM

கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: அடுத்த வாரம் நேர்முகப் பரீட்சைமட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகளின் அரச நியமனம் தொடர்பான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறவுள்ளது. 

இதில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான வி.முரளிதரன் தெரிவித்தார். 

நேற்று முன்தினம் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டு உடனடியாக திறைசேரிச் செயலாளருக்கு ஜனாதிபதி விடுத்த உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

இதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு வரையில் பட்டங்களை முடித்த அனைத்து பட்டதாரிகளும் உள்வாங்கப்படுவார்கள். அதன் மூலம் பட்டதாரிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீரவு கிடைக்கும். எனவே விண்ணப்பித்த அனைத்துப்பட்டதாரிகளும் இந்த நேர்முகப்பரீட்சையில் பங்குகொள்ள வேண்டும். 

அந்த வகையில் விண்ணப்பித்த அனைவருக்குமான நேர்முகப்பரீட்சைக் கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் பட்டதாரிகளுக்கான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவேன். அதே நேரம் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆவன செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya