Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சம்பந்தன் மீண்டும் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சம்பந்தன் மீண்டும் தெரிவு

Written By sakara on Sunday, May 27, 2012 | 12:34:00 PM




 இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின்பொதுச் சபை கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றபோது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவாளார். நிருவாகச் செயலாளராக  குலநாயகம், பொருளாளராக எஸ்.ரி.ஆர். தியாகராஜா, சிரேஷ்ட உப தலைவர்களாக நாடாளுமன்ற பொன் செல்வராசா, பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுடன், பிரதிச் செயலாளர் நாயகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைராசசிங்கம், தொழிற்சங்கச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன், கலாச்சாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன், சட்டம் மற்றும் வெளி விவகாரங்களுக்கான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் தெரிவாகினர். இவர்களுடன் 8 மாவட்டங்களுக்குமான உப தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை, பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மாநட்டுக்கு  கறுப்புக் கொடிகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya