Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » விடுதலை செய்யப்பட்டார் சரத் பொன்சேகா !

விடுதலை செய்யப்பட்டார் சரத் பொன்சேகா !

Written By sakara on Monday, May 21, 2012 | 7:22:00 PM


  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. 'நவலோக' தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொன்சேகா, அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

கடந்த 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா, இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.

இந்நிலையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டதையடுத்து, இன்று விடுதலை செய்யப்பட்ட பொன்சேகா, தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை வரவேற்பதற்கு ஏராளமான ஆதரவாளர்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் திரண்டிருந்தனர். 
__
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya