![]() |
புதுடில்லியில் சிஎன்என் - ஐபிஎன் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செவ்வியில் அவர் மேலும்,
"ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது இலங்கைக்கு நல்லதல்ல. தனிப்பட்ட ரீதியாக, இந்த நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருக்கின்றது எனினும், இந்த நிலை ஏற்பட இலங்கை அரசு ஏன் விட்டிருக்க வேண்டும்? இதுவே குழப்பமாகவுள்ளது.
காரணம், 2009இல், கடைசியாக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா எங்களுக்கு முழுமையாக ஆதரவளித்திருந்தது. எங்களுக்காக ஆதரவு தேடியது. அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.
எங்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு, இரு நாடுகளுக்குமிடையில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்தியா இந்த முடிவை சாதாரணமாக எடுத்ததாகக் கருத முடியவில்லை.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலகத்தைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு இலங்கை அரசாங்கம் போதுமான அளவில் எதனையும் செய்யவில்லை. நல்லிணக்கத்துக்கு, பௌதிக மீள்கட்டுமானத்துக்கு இன்னும் அதிகமாகவே செய்ய முடியும். போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகி விட்டன.
கேள்வி- இந்தியாவின் வாக்கு இந்திய- இலங்கை உறவுகளை வெட்டிப் போட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விடயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியா கடந்த காலத்தில் எந்தவொரு வழியிலும் இலங்கையின் கொள்கைகள், திட்டங்களில் அல்லது அரசாங்கத்தில் தடைகளை ஏற்படுத்தியதில்லை. தனிப்பட்ட முறையில் இது எனக்குத் தெரியும்.
தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. போரின் முடிவு தானாகவே அமைதியைக் கொண்டு வந்து விடாது என்ற கருத்தை நான் எப்போதும் கொண்டுள்ளேன்.
தீவிரவாதத்தில் இருந்து விடுபட அதுதான் முதலாவது அடி என்பது வெளிப்படை. ஆனால் அதன் பின்னர் நிறையவே மீளக்கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பாக இந்தியாவின் பங்கு எமக்கு உதவி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
எமது அரசாங்கத்தை இந்த வழியில் முன்நோக்கிச் செல்வதற்கு ஊக்குவிக்கின்ற வகையில் இந்தியாவின் செயற்பாடு அமைய வேண்டும். இந்தியா அதை நன்றாகவே செய்கிறது. எனவே இந்த வகையில் இந்தியா சொல்வதை நாம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !