மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியி பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் 62 பேரீத்தம் மரங்கள் அண்மையில் நடப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிமான பேரீத்த மரங்கள் பூத்தும் காய்த்தும், பழமாகியதையடுத்து அதனை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தலைமையில் 27வது பேரீத்த மரத்தில் அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பேரீத்த பழங்ளை அறுவடை செய்யும் நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்தர்தி முரளிதரன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிதியமைச்சரின் செயலாளர் றுஸ்வின், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமான மரங்களில் அதிகமான பேரீத்தம் பழங்கள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !