சுமார் 70 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தப்பாலம் ஜனாதிபதியின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மிகவும் அதி நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் கொழும்பு, திருகோணமலை, கதுறுவெல, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, பதுளை, பாணந்துறை, மூதூர் ஆகிய முக்கிய இடங்களில் இருந்து காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை, பொத்துவில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்காக ஆறு மணித்தியாலங்களுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் எனவும் நிர்மாணப் பணிப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த நவம்பர் மாதம் நிர்மாணப் பணிகளுக்காக முதன் முறையாக போக்குவரத்துக்குத் தடைப்படுத்தப்பட்டது.மீண்டும் மூடப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !