Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மட்டக்களப்பில் ஐநா செயற்பாட்டாளர் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் ஐநா செயற்பாட்டாளர் வீட்டின் மீது தாக்குதல்

Written By sakara on Monday, April 16, 2012 | 1:37:00 PM


மட்டக்களப்பில் ஐநா செயற்பாட்டாளர் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு நகரின் கோவில் வீதியில் உள்ள ஐ.நாவின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான பொறியியலாளரின் வீட்டின் மீது நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பில் ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் காண்டீபன் என்ற பொறியியலாளரின் வீட்டின் மீதே நேற்று இரவு 7.45 மணியளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்தத் தாக்குதலில் வீட்டின் கதவுகள், யன்னல்கள் உடைந்து சேதமாகின. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. 

இந்தத் தாக்குதல் ஜெனிவா தீர்மானத்தை அடுத்து ஐ.நா மற்றும் மேற்குலகின் மீது இலங்கையில் காட்டப்பட்டு வரும் வெறுப்புணர்வின் வெளிப்பாடாக இடம்பெற்றதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை. 

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya