Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » T-20 ஆட்ட நிர்ணய சர்ச்சையில் ஆறு நடுவர்கள்! (காணொளிகள்)

T-20 ஆட்ட நிர்ணய சர்ச்சையில் ஆறு நடுவர்கள்! (காணொளிகள்)

Written By sakara on Tuesday, October 9, 2012 | 10:33:00 PM

T-20 ஆட்ட நிர்ணய சர்ச்சையில் ஆறு நடுவர்கள்! (காணொளிகள்)லஞ்சம் பெற்றுக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பியது. 

இந்த விடியோவில், வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது. 

இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும், இலங்கை பிரீமியர் லீக் ஆட்டங்களிலும் முடிவுகளை மாற்றி அறிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த முறைகேட்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கெளரி மற்றும் அனீஸ் சித்திக், வங்கதேசத்தைச் சேர்ந்த நாதிர் ஷா, இலங்கையைச் சேர்ந்த காமினி திஸாநாயக்க, மெளரீஸ் வின்ஸ்டன் மற்றும் சகாரா கல்லேக் ஆகிய 6 நடுவர்கள் ஈடுபட்டுள்ளதாக விடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

அதே நேரத்தில், ஷா மற்றும் ஷரஃபுதுல்லா ஆகிய நடுவர்கள் மட்டும் இந்த முறைகேட்டுக்கு சம்மதிக்கவில்லை. இந்த விடியோவும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இவர்களிருவரும் இப்போதையே ஐசிசி நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், "வங்கதேச பிரீமியர் லீக் ஆட்டங்களில் "மேட்ச் பிக்சிங்´குக்கு பாகிஸ்தான் வீரர் நஸீர் ஜம்ஷெட் ஒப்புக் கொண்டதாக´வும் ஷா அதில் தெரிவித்துள்ளார். 

இலங்கை நடுவர் கல்லேக் செப்டம்பர் 17ஆம் திகதி நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மை, நாணய சுழற்சி, அணி வீரர்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை ரூ. 50 ஆயிரத்துக்கு வெளியிடுவதாக ஒப்புக் கொண்டது விடியோவில் பதிவாகியுள்ளது. 

"இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மதுபானம் வாங்கித் தந்தால் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவர்´ என்று திஸாநாயக்க உறுதியளித்ததும் டி.வி.யில் ஒளிபரப்பானது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நடுவர் சித்திக், "பணம் அளித்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக செயல்படுவதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தான் சமாளித்துக் கொள்வதாகவும்´ கூறியது விடியோவில் வெளியாகியுள்ளது. 

 



 



 



 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya