Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட இலக்கத்தகடு அறிமுகமாகிறது

மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட இலக்கத்தகடு அறிமுகமாகிறது

Written By sakara on Tuesday, August 7, 2012 | 7:45:00 AM

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக முச்சக்கர வாகங்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இத்திணைக்களம் முன்னர் 'ஸ்ரீ' எழுத்து கொண்ட இலக்கத்தகட்டை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஸ்ரீ நீக்கப்பட்டு ' - ' இடப்பட்டது. அதன்பின் இரு ஆங்கில எழுத்துக்கள் கொண்ட இலக்கத்தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
01.08.2000 ஆம் திகதியிலிருந்து 30.06.2012 ஆம் திகதிவரை இத்திணைக்களம் 3,046,008 ஆங்கில எழுத்து கொண்ட இலக்கதகடுகளை வழங்கியுள்ளது.

புதிய மூன்று ஆங்கில எழுத்து இலக்கத்தகடு திட்டத்தின்மூலம் 6.4 மில்லியன் வாகனங்களை பதிவு செய்ய முடியும். தற்போதைய இரு ஆங்கில எழுத்து இலக்கத் தகடு தொடர் முடிவடைந்தவுடன் ஏனைய வாகனங்களுக்கும் மூன்றெழுத்து இலக்கத்தகடுகள் வழங்கப்படவுள்ளன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya