Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது

புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது

Written By sakara on Friday, July 20, 2012 | 9:21:00 PM

ரமழான் தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை நோன்பு ஆரம்பம் ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ரமழான் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதனால் நாளை சனிக்கிழமை அதிகாலை முதல் நோன்பு நோற்குமாறு இலங்கையில் வாழும் முஸ்லிம்களை கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டியுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலிலுள்ள மத்ரஸதுல் ஹமீதியா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையினை அடுத்து இடம்பெற்ற பிறை தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன்போது, நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தலுடன் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் அகில இலஙகை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பிரதிநிதிகள், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் தக்கீயாக்கல் மற்றும் சாவியாக்கல் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya