Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » மெக்ஸிகோவில் தலை துண்டித்து பாலத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் 23 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)

மெக்ஸிகோவில் தலை துண்டித்து பாலத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் 23 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)

Written By sakara on Sunday, May 6, 2012 | 11:06:00 PM


  மெக்ஸிக்கோவின் நுயவோ லாரெடோ நகரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அச்சடலங்களில் சில பாலமொன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலும் ஏனைய சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் வீதியோரமொன்றில் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.

பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 9 சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சில மணி நேரத்தில் வாகனமொன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 14 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

நகர மேயரின் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த மேற்படி வாகனத்திலிருந்த பனிக்கட்டி பெட்டிகளிலேயே இந்த சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தூக்கில் தொங்கவிடப்பட்ட சடலங்களுடன் காணப்பட்ட துண்டுக் குறிப்பில் போதைவஸ்து குழுவினரால் கொல்லப்பட்ட வளைகுடா போதைவஸ்து குழு உறுப்பினர்கள் என குறிப்பிட்டிருந்தது.

மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைவஸ்தை கடத்தும் பாதைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து போதைவஸ்து குழுக்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya