Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » தமிழரசுகட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு 25ல் ஆரம்பம்- தலைவராக மட்டு. சட்டத்தரணி

தமிழரசுகட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு 25ல் ஆரம்பம்- தலைவராக மட்டு. சட்டத்தரணி

Written By sakara on Saturday, May 12, 2012 | 9:13:00 PM


இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும்.
26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும்.
தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பமானவர்கள் மாவட்ட கிளைகள் ஊடாக தங்கள் விண்ணப்பங்களை 15ஆம் திகதி செவ்வாய்கிழமைக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.
27ஆம் திகதி பிரதிநிதிகள் மகாநாடு, தலைமைபேருரை, பிரகடனம் என்பன இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிருக்காது என்றும் மாவை சேனாதிராசாவே ஏகமனதாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என தெரியவருகிறது. தற்போது தலைவராக இருக்கும் சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya