Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் முதல் கூட்டம் நாளை

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் முதல் கூட்டம் நாளை

Written By sakara on Sunday, April 29, 2012 | 12:29:00 PM


தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் முதல் கூட்டம் நாளைதமிழ்நாட்டில் 1980களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் சென்னையில் நாளை 30ம் திகதி தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் திகதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya