Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » இவ்வருடத்திற்குள் தேவையான டின்மீன்களில் அரைப்பங்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும்

இவ்வருடத்திற்குள் தேவையான டின்மீன்களில் அரைப்பங்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும்

Written By sakara on Tuesday, April 10, 2012 | 7:14:00 AM

இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்குத் தேவையான டின்மீன்களில் அரைப் பங்கையாவது உள்நாட்டில் தயாரிக்கப்பட முடியும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

காலியில் அமைக்கப்பட்டுள்ள டின்மீன் தொழிற்சாலையில் ஏப்ரல் 3 ஆம் திகதி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தினசரி 10,000 டின்களாக உள்ள இதன் உற்பத்தி படிப்படியாக 20,000 ஆக அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.

பேலியகொடையிலும் புத்தளம் மாவட்டத்தின் முந்தலமவிலும் உள்ள மேலும் இரு தொழிற்சாலைகளிலும் இவ்வருடம் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மூன்று தொழிற்சாலைகள் மூலமும் தினமும்  குறைந்தபட்சம் 60,000 டின்மீன்களை தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இலங்கைக்கு தினமும் 100,000-120,000 டின்மீன்கள் தேவைப்படுகின்றன. தற்போது சீனா, தாய்லாந்து, சிலி ஆகிய நாடுகளிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக வருடாந்தம் 520 கோடி ரூபா செலவிடப்படுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya