
சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று (22) அவர் அளித்த பேட்டியில்,
கடந்த 16ம் திகதி முதல் 21ம் திகதி மதியம் வரை இலங்கையில் இந்திய எம்.பி.க்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும் குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது.
எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம்.
அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் தமிழ் போர் விதவைகளை பார்த்தோம்.
அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட எம்.பி.க்கள் அனைவரும் கண்ணீர் விட்டோம். யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் இராணுவங்கள் முகாமிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள். நாங்களும் ராஜபக்ஷ்விடம் வலியுறுத்தினோம்.
தமிழர்கள் பகுதியில் இராணுவத்தினரை வாபஸ் பெற்று விட்டு ஆட்சியாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
கடந்த முறை இந்திய எம்.பி.க்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !